ரஜினி சொன்ன குட்டி கதைகள் - 2

'சூப்பர் ஸ்டார்' ரஜினி அவர்கள் பொதுமேடைகளில் அவ்வபோது சிறு சிறு கதைகளை சொல்வது வழக்கம். அதில் எனக்கு பிடித்தவைகள் சில அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்...

ஏன் இங்கே இருக்கோம் ...?!

ஒரு தாய் ஒட்டகத்தை பார்த்து குட்டி ஒட்டகம் "அம்மா எமக்கு அதற்காக நீண்ட கால்கள் உள்ளன" என்று கேட்டது. அதற்கு தாய் ஒட்டகம் "நாம் பாலைவனத்தில் மணல்களுக்குள் நடப்பதற்கு இலகுவாக கால்கள் நீளமாக படைக்கப்பட்டுள்ளது" என்று கூறியது.

"சரி எதற்காக நமது உதடுகள் இவ்வளவு சொரசொரப்பாக உள்ளன" என்ற குட்டி ஒட்டகத்தின் கேள்விக்கு "பாலைவனத்தில் வெப்பம் அதிகம் என்பதாலும் பாலைவனத்தில் கிடைக்கும் உணவுகள் உலர்ந்ததாகவும் மெல்ல முடியாமலும் இருக்கும் என்பதாலும் அதற்கேற்றால் போல உதடுகள் படைக்கப்பட்டுள்ளது" என தாய் ஒட்டகம் கூறியது.

"அப்படியானால் எதற்கு எமக்கு பெரிய கழுத்துக்கள் உள்ளது" என்ற குட்டி ஒட்டகத்தின் கேள்விக்கு "பாலைவனத்தில் உணவு, நீர் என்பன கிடைப்பது அரிது என்பதால் கிடைக்கும் உணவு, நீர் என்பவற்றை நீண்ட நாட்களுக்கு பாதுகாக்கவே பெரிய கழுத்துக்கள் படைக்கப்பட்டன" என தாய் ஒட்டகம் பதில் கூறியது.


"அதெல்லாம் சரி பின்னர் எதற்காக நாம் இருவரையும் இங்கு அடைத்து வைத்துள்ளனர்" என்று விலங்கு காட்சிசாலையில் இருந்த அந்த குட்டி ஒட்டகம் தன் தாயை பார்த்து கேட்டது.

இந்தக்கதையின் தாக்கம் என்மனதில் பல கேள்விகளை உண்டாக்கியது, உங்களுக்கும் இந்த கதை ஒரு தாக்கத்தை உருவாக்கும் என்று நினைக்கிறேன் என்றார் ரஜினி. இவர் எதனை சொல்ல வருகிறார் என்பது உங்களுக்கும் புரிதிருக்கும் என்று நினைக்கிறன்.

நேரம் நல்லாயிருந்தா…!!!!

ஒரு ஊரில் ஒரு சம்சாரி. எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தால் அதிக ஆண்டுகள் வாழலாம் என்கிற கேள்வி அவன் மனதை அரித்துக்கொண்டிருந்தது. நூறாண்டு வாழ்ந்த ஒருவரைப் பார்த்தான். ‘இத்தனை ஆண்டுகள் வாழ்ந்துவிட்டீர்கலே எப்படி! எப்படி?’ என்று கேட்டான்.

அதற்க்கு அவர், “நான் மாமிசம் சாப்பிடமேட்டேன். தண்ணி அடிக்க மேட்டேன். அதனால் தான்!” என்று பதிலளித்தார்.

லேசான இருமல் சத்தம் கேட்டது. இருமுவது யார்? என்று கேட்டார் சம்சாரி.

“எங்கள் அண்ணன்” என்றார் அந்த நூறாண்டு மனிதர். “உங்களுக்கே வயது நூறாகிறது. உங்களுக்கு ஒரு அண்ணனா? அவரை நான் பார்க்கவேண்டுமே” என்றார் சம்சாரி.


அவரை பார்த்தார். “எப்படி இத்தனை ஆண்டுகள் வாழ்ந்து வருகிறீர்கள்?” என்று கேட்டார். “நான் தினமும் மாமிசம் சாப்பிடுவேன், தண்ணி அடிப்பேன்” என்றார் நூறாண்டு மனிதரின் அண்ணன். நமக்கு நல்ல நேரம் என்றால் விஷம் சாப்பிட்டாலும் தப்பித்துவிடுவோம். கெட்ட நேரம் என்றால் பாலும் விஷமாகலாம்.”

குறிப்பு: ரஜினியே எதிர்த்திருந்தாலும், நேரம் நல்லாயிருந்துனால ஒருத்தரு போன லோக்சபா தேர்தல்ல அசால்ட்டா எல்லா சீட்டும் ஜெயிச்சாரு. அதே நேரம் இப்போ சரியில்லை எனும்போது – ஒரு பெரிய கூட்டணியில இருந்து கூட – அவரால ஒரு சீட் கூட ஜெயிக்க முடியலே…

ஸோ, எல்லாத்துக்கும் நேரம் ரொம்ப முக்கியம்…..!!

Thanks : Eegarai & Eppoodi
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி!!!



1 comments:

Kumaran said...

வணக்கம்,
ரஜினிகாந்தின் பெரிய ரசிகன் நான்..அவரது கதைகளை சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு எனது நன்றிகள்.

Post a Comment

Related Posts with Thumbnails
 
back to top